திங்கள், 4 ஆகஸ்ட், 2014

நான் யார்...?

எலும்பும் சதையுமாக
நரம்பும் தோலுமாக
ஆக்கப்பட்டவனா நான்...?
அல்லது....
அன்பும் கருணையுமாக
நேசமும் பாசமுமாக
கொண்டவனா நான்.....?

இல்லை நிச்சயமாக இல்லை...

மனிதனுக்கு இட்ட எல்லைகள்
எனக்கு கிடையாது....
எல்லையற்ற பிரபஞ்சமே
என் உறைவிடம்.....
வரையறைகள்
எனக்கும் கிடையாது
கடவுளுக்கும் கிடையாது....

ஏனென்றால்....

நான் கடவுள்..!

அன்புடன்,
Sathish Kumar

சிந்தனை சிதறல்கள்

இன்று அதிகாலை நான்கு மணிக்கு நான் தூக்கம் களைந்தவனாக யோசித்த விஷயம் இது, உலகத்திலேயே மிக அற்புதமான இயந்திரம் எது தெரியுமா,?

நம் உடல்தான். இயக்கத்திற்கான சக்தியை உணவிலிருந்து பெற்று, 24 மணிநேரமும் இதயம் எனும் இஞ்சினை இயக்குகிறது, ஏர் கம்ப்ரசர் வேலையை நுரையீரல் செய்கிறது. கட்டளை பிறப்பிக்கும் வேலையை சிபியூ போல நம் மூளை செய்கிறது, உடலெங்கும் சென்சார் யூனிட்டுகளாக நம் நரம்புகள், இவை அனைத்தையும் கொண்ட அற்புத இயந்திரம் நாம். ஆனால், நாம் அந்த இயந்திரத்தை ஒழுங்காக செயல்பட விடுகிறோமா,? நெல்மணிகள் அதிகமாக விளைய விஷமிட்டு வளர்க்கிறோம் அதே ஸ்லோ பாய்சனை நாமும் உண்டு நம் குழந்தைகளுக்கு தெரிந்தே கொடுக்கிறோம். இது ஒழுங்காக ஓடும் இயந்திரத்திற்கு பெட்ரோல் உடன் தாரை கலந்து ஊற்றுவது போலாகும்.
ஆகவே விவசாயிகளே, ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை இடுங்கள், நம் உடல் இயந்திரத்தை பேணிக்காப்பாற்றுங்கள்....

( எங்க ஆரம்பிச்சு எங்க போய் முடிக்கிறான் பாருயா,? இப்ப இன்னாபா சொல்றனு, நீங்கல்லாம் நெனிகிறது தெர்து... இன்னா தல பண்றது, தூக்கம் வரல, எதுனா எய்திதான ஆகனும்)

மாக்கான்'ஸ் மைன்ட் வாய்ஸ்

அய்யா இலவசமாக நிலம் கொடுத்தாரு., அம்மா அதுல பசுமை வீடா இலவசமாக கட்டி கொடுத்தாங்க, மாசா மாசம் இலவசமாக அரிசி கிடைக்குது., என் சொந்த அம்மாவுக்கு மாசா மாசம் ஓய்வுத் தொகை கிடைக்குது அதுல மலிவு விலைல மளிகை வாங்கிடலாம், என் குழந்தைகளுக்கு படிப்பு செலவே இல்ல செருப்புல இருந்து லேப்டாப், சைக்கிள் வரை இலவசமாக கிடைக்குது., கைச்செலவுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப இலவசமாக ஆடு கொடுத்தாங்க, எங்க வீட்ல வசதி இல்லனு எவன்யா சொன்னது., மிக்ஸி, கிரைண்டர், டேபிள் பேன், கேஸ் ஸ்டவ், வண்ணத் தொலைக்காட்சி எல்லாமே இலவசமாக வாங்கிட்டம்ல., என் பையன் படிச்சுட்டு சும்மா இருக்காப்ல அவன் பாக்கெட் மணிக்கு மாச மாசம் உதவித்தொகை வேற கொடுக்கறாங்கப்பா., பொண்ணு கல்யாணத்துக்கு சம்பாதிக்கனும்னு எனக்கென்னங்க இருக்கு.? அதான் தாலிக்கு தங்கம் இலவசமாம்ல., அம்மா உப்பத்தான் தினமும் திங்கறோம்., வீட்ல சாப்பிட்டு போர் அடிச்சா, அம்மா உணவகத்துல அஞ்சு ரூவாய்கு வயிறு நிறைய சாப்புடறோம்., வெளிய போனா அம்மா தண்ணியத்தான் வாங்கி குடிக்கறோம்., இவ்வளவையும் கொடுக்கும் போது நாங்கல்லாம் என்ன ம... னாவுக்குங்க வேலைக்கு போகனும்.?
அப்படியே வேலைக்கு போறம்கற பேருல சும்மா உட்கார்ந்து நூறு நாள் வேலைத்திட்டதுல போனாலும், அந்த காச அப்படியே அம்மா சாராய கடைல (டாஸ்மாக்) போடரதுதானுங்க நியாயமானது, அதாங்க தர்மம்.

( இது சிரிப்பதற்காக மட்டும் அல்ல., இலவசமாக அனைத்தையும் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கும் திராவிடக்கட்சிகளின் தோலை உரிப்பதற்காகவும்தான்.... நோட்டை வாங்கிவிட்டு ஓட்டை போட்டு தங்கள் வாழ்க்கையை கோட்டைவிடும் மானம் கெட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு எப்போது. ? )
L

தேடல்....

ஒரு இடம்,
அங்கே நிசப்தம் மட்டுமே இருக்கும்...
இருள் மட்டுமே நிறைந்திருக்கும்....
பணம் அங்கு ஒரு பொருட்டல்ல....
காற்று கூட தேவையில்லை......
மனித பேதங்களுக்கு இடமில்லை...
நிறமும் இனமும் தேவையில்லை....
எனக்கே புரியவில்லை
நான் தேடுவது
கருவறையா.? கல்லறையா.?

Sathish Kumar

சிந்தனை சிதறல்கள்

வாழ்க்கையில் தோல்விகளுக்கு காரணம் விதியா.? மதியா.?
தோல்விகளுக்கு உலகம் தரும் ஒரே மருந்து தன்னம்பிக்கை....
தன்னையே நம்பாதவனுக்கு தன்னம்பிக்கை எப்படி வரும்.?

வெற்றிக்கு மதி காரணம் என்றால்
வீழ்ந்தவனுக்கு மட்டும் விதி சொந்தமா.?
எண்ணியதெல்லாம் எண்ணியபடி நடந்துவிட்டால் 
எண்ணியவனெல்லாம் கடவுள் ஆவான்.
பண்ணிய கர்மவினை என்றால்
தர்மம் இருந்து என்ன பயன்.?
பலரின் தோல்விகள் ஒருவனுக்கு வெற்றியாகிறது...
உன் வெற்றிக்கு காரணம் கடவுள் என்றால் பலரின் தோல்விகளுக்கும் காரணம் கடவுள்தான்....
பாவ புண்ணிய கணக்கை கூட்டிக்கழித்துப் பார்க்க கடவுள் என்ன கணக்குப்பிள்ளையா.?
பத்து ரூபாயை உண்டியலில் போட்டு குடும்பத்திற்கே மொட்டை போட்டால் கடவுள் வெற்றியை மட்டும் அளிப்பான் என்று சட்டம் உண்டா.?

ஆக., வெற்றியோ தோல்வியோ அனைத்திற்கும் நாம்தான் காரணம்...
சரியான நேரத்தில் சரியான கோணத்தில் சிந்திப்பவன் அதனை சரியான சூழ்நிலையில் பயன்படுத்துபவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்......

'உன்னயெல்லாம் இப்டி பேச சொல்லி யார்டா சொன்னது ' ன்னு கவுண்டமணி ரேஞ்சுல பல்ல கடிக்கறது நல்லா தெரியுது. .... என்ன பண்ணறது எல்லாம் விதி.......

மாற்றம் ஒன்றே நிலையானது

காலம் மாறுகிறது
காட்சிகளும் மாறுகிறது
மனமும் மாறுகிறது
தினமும் மாறுகிறது
விளைவில்லா வார்த்தைகள் கூட
நொடிக்கு நொடி மாறுகிறது
மனிதனும் மாறுகிறான்
மனைவிகூட மாறுகிறாள்

உயிரில்லா பணத்திற்கு
உயிரைக் கூட தருகிறோம்
நேசித்த நெஞ்சங்களை
நிர்கதியாக்கி விடுகின்றோம்
கருப்பும் வெள்ளையாகிறது
களையும் கலைந்து விடுகிறது
இளமையது மூப்பாகும்
கைத்தடி காப்பாகும்

காலன் வந்து கரம் பிடிப்பான்
காயமதனைக் கரி திங்கும்
மேலே வானம் கீழே பூமி
நடுவில் எங்கிருந்து வந்தது சாதி
நிறமும் இனமும் வேறென்றாலும்
மனிதன் என்னும் மகத்துவம் மாறுமா.?
அன்பும் கருணையும் வழி என்றால்-உன்
வாழ்வையும் வழியையும் சரித்திரம் கூறுமே.!

மாற்றங்கள் இல்லாமல் வையம் இல்லை
வையத்து மாற்றங்கள் நம்மால் நிகழட்டும்..
ஏனென்றால்.,
மாற்றம் ஒன்றே நிலையானது.

அன்புடன்
Sathish Kumar
L

நீ...!

முதல் வரியில் மரித்துவிட்ட என் அழகிய கவிதை நீ.....!
மூன்றாம் பிறையிலேயே மூழ்கிவிட்ட என் முழு நிலவு நீ.....!
காயாய் இருக்கும்போதே கசந்திட்ட என் முக்கனி நீ.....!
கருவிலேயே கரைந்திட்ட என் இனிய மழலை நீ......!
தொடக்கத்திலேயே தொலைத்திட்ட என் மொத்த வாழ்வும் நீ... நீ... நீ...!

எனது ஆட்சியில்.....

1. மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். நாடெங்கும் ஒரே கல்விமுறை பின்பற்றப்படும்.

2. மறைநீர் ( virtual water ) அதிகமாக பயன்பாடு உடைய தொழில்கள் கண்டறியப்பட்டு அவை உள்நாட்டில் மட்டும் இயங்க வழிவகை செய்யப்படும்....

3. நாடெங்கும் இட ஒதுக்கீடு முறை அறவே ஒழிக்கப்பட்டு திறமை மட்டுமே முன்னிருத்தப்படும்.

4. ஒவ்வொரு குடும்பமும் தலா மூன்று மரங்களையாவது கட்டாயமாக வளர்த்தால்தான் குடும்ப அட்டையில் பொருட்கள் வழங்கப்படும்.

5. சுய லாபம் கருதி கடமையை செய்யாமலிருப்பவர்கள் மற்றும் கடமையை மீறுபவர்களுக்கு முதல் முறைமட்டும் மன்னிப்பு வழங்கி தேசதுரோகி பட்டம் இலவசமாக வழங்கப்படும்.

6. இலவசங்கள் அறவே ஒழிக்கப்பட்டு மக்களை உழைத்து அவற்றை எளிதாக பெற்றிட தகுந்த திட்டங்கள் தீட்டப்படும்.
7. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் மீட்கப்பட்டு அவற்றில் இராணுவ தளவாடங்கள் வாங்கி உலகின் மிகச் சிறந்த இராணுவமாக நம் இராணுவம் ஆக்கப்படும்.


1. சர்ச் பார்க் கான்வென்ட் ல் படிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி மஞ்சக்கோணாம்பாளையம் மாரப்பன் மகனுக்கும் கிடைக்கும்.

2. 50 $ = 1 ₹ என்ற நிலை வரும்.

3. கோவிலில் சிறப்பு தரிசன முறை ஒழிக்கப்படும்.

4. லஞ்சம் வாங்கியது நிருபிக்கப்பட்டால் வலது கை கட்டைவிரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட சட்டம் பிறப்பிப்பேன். (டாக்டர் பீசை அந்த கபோதியிடமே இரண்டு மடங்கு கறக்க வேண்டும்)

5. பெர்டிலைசர் கம்பெனிகளை இழுத்து மூடிவிட்டு, இயற்கை விவசாயத்தை கட்டாயமாக்குவேன். 

நினைவுகள்

இளவேனிற்காலத்து அந்திமாலை நேரம்....
சில்லென்ற குளிர் காற்று முகத்தை வருடுகிறது.....
அன்றலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் அருகே நீ.....
அதிகாலை நேரத்து பனித்துளியாய் உன் ஸ்பரிசம்...
ஜன்னல் ஓரத்துக் காட்சிகளாய் நினைவுகள் பயணிக்கிறது.....
இருவரின் கண்களும் சங்கமிக்கிறது ஸ்பஷ்டமாக....
கைகள் மலர்க் கொடி போல பின்னிக் கொண்டன.....
இருவரின் உயிரும் கண்களின் வழியே கூடுவிட்டு கூடுபாய தொடங்கியது.....
உயிரே உணர்விற்குள் கலந்துவிட்ட போது இதழ்கள் மட்டும் ஏமாந்துவிடுமா?....

"அட பரதேசி...! மணி எட்டு ஆகுது இன்னும் எந்திரிக்காம என்னடா தூக்கம்? இவனும் இவன் வேலையும்,.... "

ஹூம்ம்.... கனவா இது..... ஓசை இல்லாமல் பாயை சுருட்ட ஆரம்பித்தேன் நான்.......

அன்புடன்,
SATHISHKUMAR. A