செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஒரு அழகிய தமிழ் மகளின் டைரிக்குறிப்பில்.....

பொதுவாக அடுத்தவர்களின் டைரியைப் படிப்பது நாகரீகம் இல்லை என்றாலும் பழைய பேப்பர்காரனின் பையில் இருந்த டைரியை படித்ததில் தவறில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் எனக்கு ஒரு பெண்ணின் டைரியை படிக்கும் பாக்யம், இல்லை வாய்ப்பு கிட்டியது சுவாரசியமாக ஏதும் இல்லை என்றாலும் அதிலிருந்த ஒரு கவிதை நன்றாக இருந்ததால் அது உங்கள் பார்வைக்கு......


என்னவனே !
உன் பெயரை உச்சரிக்கிறேன்
என்னுள் ஏற்ப்படும் மாற்றத்தை உணர,
எல்லா உறவுகளுக்கும் எல்லை வரையறுக்கும் என்னால்,
உனது உறவுக்கு எல்லையிட தெரியவில்லை, முடியவில்லை,
இருவரின் எண்ணங்களைப் பார்க்கிறேன்
இதுதான் விட்டகுறை தொட்டகுறையோ,
எனக்கு ஓர் தணியாத ஆசை
என் கண்களுக்குள் உன்னை சிறை வைக்க,
பார்த்து பழகியது சில மாதங்கள் என்றாலும்
வாழ்ந்து முடிந்த பல வருடங்கள் கண்முன்னே,
உனது வெற்றிக்கு பின்னால்
நானிருக்க ஆசையில்லை
உனது வெற்றியாகவே நானிருக்க ஆசை,
உனக்கு தெரியுமா ? நான் ஒரு சுயநலவாதி!
என்னைத் தவிர உன்னை யாரும் நேசிக்க கூடாது என்பதில்,
இது தப்பில்லை அன்பை இப்படியும் காட்டலாம்
என்ற எனது கருத்தின்படி,  
உன் நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்த என்னை
உன்னையும் சுமக்க அனுமதிப்பாயா?
உனக்குத் தெரியும் எனக்கு
கவிதை எழுத தெரியாது என்று
இதை உனக்காக முயற்ச்சித்தேன்
எனக்கு தெரியவில்லை இது கவிதையா?.....

அன்புடன்.,
அழகிய தமிழ்மகள்.

                                          

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .....

                                         நம் நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இன்றும் மக்கள் அடிமைகளாக வாழ்ந்துவரும் அவலநிலை உள்ளது.ஒரு வித்தியாசம் அன்று ஆங்கிலேயர்களிடம், இன்று நம் நாட்டவரிடம்.நினைத்துப் பாருங்கள் நாட்டின் இன்றைய சூழலை, வாக்கு வங்கி அரசியல் நடத்தும் ஆட்சியாளர்கள் நம் நாட்டிற்கே சாபக்கேடு.இதற்க்கு ஒரு உதாரணம் அப்சல் குரு என்ற கொடிய தீவிரவாதி நம் நாட்டின் இதயமான பாராளமன்றத்தில் தாக்குதல் நடந்ததில் தொடர்புடையவன் இவனை விசாரித்து குற்றம் நிரூபனமானத்தில் 2006 அக்டோபர் 2 அன்று தூக்கில் போட உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். ஆனால் இன்றுவரையில் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.இது மற்றவர்களுக்கு இந்தியாதானே என்ற அலட்சியத்தி ஏற்ப்படுத்த வழிவகுக்கும்.இந்த நிலையில், அப்சல் குரு சார்பில், அவரது மனைவி சமர்ப்பித்த கருணை மனு மீது குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை தெரிவிக்கக் கோரி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள , உள்துறை அமைச்சகம், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்சல் குருவின் கருணை மனு மீது குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க முடி யாது என மறுப்பு தெரிவித்துவிட்டது.வாக்கு வங்கிதான் நாட்டின் இறையாண்மையா?
                                            அடுத்து இந்த தமிழக அரசை எடுத்துக் கொண்டால், சொல்லவே வேண்டாம் மதானிக்கு கட்டிய கருணை பற்றி அனைவரும் அறிந்த விஷயம்.இங்கு என்ன நடக்கிறது வெறும் கையில் முழம் போடும் வேலை நடக்கிறது. அரிசிதான் ஒரு ரூபாய்தான் ஆனால் அது சில ஏழை மக்களுக்கு மட்டும்தான். பலருக்கு கோழிகளுக்கு தீவனமாகவும், பல ஹோட்டல் முதலாளிகளுக்கு லாபம் கூட்டும் பொருளாகவும், பல அரிசி வியாபாரிகளுக்கு மறுபடி பாலீஷ் செய்து விற்று மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு கடத்தி கொண்டு சேர்த்து கேவல காசு ஈட்டும் பொருளாகவும் உள்ளதே! தமிழக முதல்வர் அவர்களின் மனம் அமெரிக்க வானிலையைப் போல மாறிக்கொண்டே உள்ளது. நல்ல குடும்பத்தலைவர்.அதுவும் இரண்டு குடும்பத்திற்கு தலைவர்.கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்...... என்று ஆரம்பிக்கும் பழமொழி போல சட்டசபை கட்டிடம் கட்டினார். அதுவும் முழுமையாக இல்லாமல் போலி துவக்க விழா நடத்தி அவருக்கு அவரே பாராட்டுவிழா  நடத்தினார்.தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாதபடியாக தமிழ் நாட்டில் ஆட்களே கிடைக்காதபடியால் வடக்கிலிருந்து மக்களைக் கூட்டிவந்து அதை கட்டி முடித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து குடும்பத்தோடு போட்டு அதற்க்கு ஒரு ஐ ஏ எஸ்  ரேங்க்கில் உள்ள அதிகாரி டப்பாங்குத்து ஆட்டம் ஆடி மகிழ்வித்து, கடவுளே! தமிழ் நாட்டிற்கு எப்போது விமோசனம் ? அவனவன் மின்சாரம் இல்லாமல் தொழில் நடத்த முடியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கிறான். இந்த வேளையில் இந்த காட்சிகளை எப்படி சகித்துக் கொள்வது?
                                     அது மட்டுமில்லாமல் இன்னொரு கேலிக்கூத்து என்னவென்றால், ஒரு மொழிக்காக மாநாடு நடத்தினார்கள் அத்துனையும் அரசின் பணத்தில்  நடத்தினார்களே, சரி அதனால் அந்த மொழி அடைந்த பயன் என்ன? அம்மொழி பேசும் மக்கள் அடைந்த பயன் என்ன? யாராவது சொல்லமுடியுமா ? ஒரு கட்சியை சார்ந்த வட்ட மாவட்ட ஒன்றிய வார்டு போன்ற தலைகளுக்கு மட்டும்தான் லாபம். அதுவும் ஐந்து நாட்கள் தேவையில்லாமல் விடுமுறை விட்டு மாநாடு தேவையா? நல்ல நாளிலேயே அரசு அலுவலர்கள் வேலை அற்ப்புதமாக பார்ப்பவர்கள் இந்த ஐந்து நாட்களில் சொல்லவா வேண்டும் ?
                                       இந்த நிலை எப்போது மாறும் ? தெரியாது. ஆனால் இது ஒரு   மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி என்பது மட்டும் புரிகிறது. பிரெஞ்சுப் புரட்சியைப் போல இந்தியாவிலும் ஏதேனும் நிகழாதா ? என்று மனம் மாற்றத்தை விரும்புகிறது. என்று தணியும் எந்த சுதந்திர தாகம்? என்று இப்போது வேண்டுமானால் பாடலாம். ஆனால் மக்கள் மாற வேண்டும். அது இல்லாதவரை இந்த அரசியல் பிழைத்தவர்களும் அதில் பிழைப்பவர்களும் இதைவிட மோசமாக போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த நிலை நீடித்தால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .....