சனி, 29 ஜனவரி, 2011

மனதோடுதான் நான் பேசுவேன்... - பகுதி 1

அன்பு நண்பர்களே !
                                இந்த நாள் வரை எனக்கு தெரிந்ததை, பார்த்ததை, பழகியதை, கேட்டதை, படித்ததை, அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை உங்களுடன் இந்த இணைய உலகில் பகிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மனதோடுதான் நான் பேசுவேன் இடுகை. மனிதர்கள் பலவிதம் மாற்றம் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் மனித மனங்களைப் பற்றியும் அதன் பண்பாட்டு உட்கூறுகளைப் பற்றியும் விவரிப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். காத்திருங்கள் எதிர்வரும் நாட்களில் உங்கள் மனதோடும் நான் பேசுவேன்......
                                 எந்த ஒரு நிகழ்வானாலும் அது இறைவணக்கத்தைக் கொண்டிருக்கும்.அதுபோல நானும் ஆரம்பிக்கிறேன். ஆன்மீகத்தையும் இயற்கையையும் இணைந்து பார்ப்பது நம் பண்பாட்டில் ஊறிவிட்டது அதுவே நிதர்சனமான உண்மையும் கூட இருந்தபோதிலும் சிலர் சொல்கிறார்கள் கடவுள் இல்லை என்பவர்களுக்கு போதிக்கவே இயற்கை சீற்றங்கள் வருகிறது இப்போதைய சூழ்நிலையில் நாஸ்திக வாதங்கள் தலை தூக்கி வருகிறது அதனால்தான் உயிர் பலிகள் அதிகரித்துவிட்டது என்கிறார்கள்.சரி பொதுவாக நம் பழக்கம்தான் என்ன? நமக்கு பாதிப்பு வந்தால் கடவுளிடம் அழுது புலம்புவது, இனிமேலாவது என்னை  காப்பாத்து என்று வேண்டிவிட்டு பழையபடி
அதே முட்டாள்தனத்தை தொடர்வது. ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு குடும்பத்திற்கே மொட்டை போட்டுவிட்டால் கடவுள் உன்னை காப்பாத்த வேண்டும் என்று என்ன சட்டமா?
                                   கடவுள் உண்டியலில் காசு போட்டுவிட்டான் என்பதற்காக காப்பாற்றவும் மாட்டார், போடாதவர்களை தண்டிக்கவும் மாட்டார்.
                                   நாம் என்ன செய்கிறோம்? " எல்லாம் மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துக்குவான் " அப்டின்னு யாரோ சொன்னத நம்பி நம்மள நாமே ஏமாத்திக்கறோம், கடவுளுக்கு அத பண்ணலாமா இத பண்ணலாமா? எத பண்ணினா கடவுள் சந்தோஷப்பாடுவாரு அப்டின்னு யோசிக்கறோம்.
                                   கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நம்மை இவ்வளவு சிறப்பாக படைத்திருக்கும் வேலையை செய்திருக்கிறாரே அது ஈடு செய்ய முடியாத சாதனை அல்லவா? அதை பயன்படுத்திக் கொண்டு நமக்குத் தேவையானவற்றை நாம்தானே தேடிக்கொள்ள வேண்டும். யாராவது எதையாவது சொல்லிவிட்டால் அவற்றை   கண்ணை   மூடிக்கொண்டு முட்டாள்தனமாக யோசிக்காமல் பின்பற்றுவது நம் பழக்கமாக இருக்கிறது.
                                    ஒரு கதை ஒரு ஆபீசில மூணு பேரு தினமும் ஒன்னாதான் மதியம் லஞ்ச் சாப்டுவாங்க. அதுல ஒருத்தர் சொன்னாரு " பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே புளியோதரைதான் நாளைக்கும் இதே புளியோதரை இருந்தா நான் என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னார்.
                                    அடுத்தவர் சொன்னாரு " அதே கதைதான் இங்கயும் பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே தயிர்சாதம்தான் நாளைக்கும் இதே  தயிர்சாதம் இருந்தா நானும் என் தலையை உடைச்சுக்குவேன். "
                                    அடுத்து நம்ம ஆளு சொல்றாரு " எனக்கும் அப்டித்தாங்க, பனிரெண்டு வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே இட்லிதான் நாளைக்கும் இதே  இட்லி  இருந்தா நானும் உங்களோட சேர்ந்து என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னு சொல்றாரு,
                                    அடுத்த நாளு பார்த்தா மூணு நண்பர்களின் டப்பாக்களிலும் உணவு மாறவில்லை வழக்கம்போல அதே புளியோதரை தயிர் சாதம் இட்லி தான். பாத்தாங்க மூணு பேரும் நல்ல பாறாங்கல்லா பாத்து தலையில முட்டி மண்டைய உடைச்சுக்கிட்டு மருத்துவமனையில போய் படுத்துகிட்டாங்க, மூணு பேரோட  மனைவியும் வந்தாங்க, ஒருத்தி " என் வீட்டுகாரரு இந்த அளவுக்கு  புளியோதரையை வெருத்திருப்பாருன்னு தெருஞ்சா நா வேற கொடுத்திருப்பனே ! " அப்டின்னு அழுதா, அடுத்தவள் " நானும் அது தெருஞ்சா இந்த தயிர் சாதத்த விட்டுட்டு வேற செய்து தந்திருப்பனே" அப்டின்னு சொன்னா
                                     அடுத்து நம்ம ஆளு மனைவி " இதுல தப்பு எங்க நடந்திருக்குன்னு தெரியல, கல்யாணமான நாளிலிருந்து தினமும் அவருக்கு தேவையானதை அவரே தான சமைச்சு எடுத்துட்டு வந்தாரு "
                                       நம்ம ஆளைப்போலதான் நாமும் நாம் விரித்தவலையில் நாமே மாட்டிக்கொள்கிறோம். ஆக நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.அது ஆன்மீகமாகட்டும் வேறு எந்த துறையாகட்டும் நமக்கு நாம்தான் நண்பனும் எதிரியும் என்பதை நினைவில் கொண்டு சரியான புரிதலுடன் வாழ்க்கையில் பயணிப்போம்.

டிஸ்கி :
                 பத்திரிகை உலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், பதிவுலகில் பதிவரின் அனுமதி இல்லாமல் அவரின் படைப்பை திருடுவது என்பது பெற்ற தாயிடம் இருந்து குழந்தையை திருடும் செயலுக்கு ஒப்பானது. நாங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்கு எப்படியோ தெரியாது, நாங்கள் எங்கள் குழந்தையைப் போல்தான் பாவிக்கின்றோம். ஆக அனுமதி இல்லாமல் எதையும் பிரசுரிக்க வேண்டாம் என்றும் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

( இன்னும் பேசுவேன்........  )

வியாழன், 27 ஜனவரி, 2011

இன்றைய இளைஞன் - ( இதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )


சமூகத்தின் பிடிப்பற்ற தன்மையும் தூரநோக்கற்ற குறுகிய இலாப சிந்தையும் பலரிலும் மேலோங்கிக் காணப்படுவதனாலேயே இளைஞர் சமூகம் இன்றும் உதவிகளை எதிர்பார்த்து நிற்கவேண்டிய சூழ் நிலையில் உள்ளது.
எந்த வேளையிலும் பிறருக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் இன மத மொழி பேதமின்றி சேவை வழங்க முன்வரும் வேளையில் நல்லதொரு எதிர்காலம் தானாக வந்தடைவதற்கு வழி கிடைக்கும். முதலில்  சோம்பேறித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து இளைஞர்களும் முன்வரவேண்டும. அரசியல் இதற்க்கு சிறந்த வழி. ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் இதற்க்கு தயங்குகிறது. ஏனென்றால் படித்த இளைஞர்கள் அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய,தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரிய விரும்புவார்கள்.அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக்கொண்டது.அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம்.தவறான வழியாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்கும் பல சிரமங்களை கடந்தாக வேண்டும்.பல கீழ்த்தர விமர்சனங்களை கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே,அதெற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும். ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ ,அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும். இப்போது    ஒரு சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும் அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் படிக்காதவர்களா?  இதற்க்கு பதில் எனக்கு தெரியாது எனக்கேன் வம்பு.
  இளைஞர்கள் எதையும் சாதிக்கமுடியும். உலகில் 300 கோடி இளைஞர்கள், இந்தியாவில் 40 கோடி இளைஞர்கள் உள்ளனர். இளைய சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. புதியோர் உலகை படைப்பது இளைஞர்களின் கையில்தான் உள்ளது.
பெரியவர்கள் அமைதி கருத்தரங்கம் நடத்திவிட்டு பின் சண்டையிடலாம். ħ0;னால் இளையவர்கள் எல்லைகளைத்தாண்டி பரந்த மனப்பான்மையுடன் சிந்திப்பவர்கள்.
நவீன தொழில்நுட்ப யுகம் நாடுகளைத்தாண்டி மனிதர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதம்,பிரிவினைவாதம்,போர்,தண்ணீர் பற்றாக்குறை, தட்பவெப்ப மாறுதல்,வறட்சி போன்றவற்றை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடவேண்டிய நிலையில் உள்ளோம்.மேலும்
மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி வறுமைதான். கொடிய ஆயுதங்களை விட வறுமையும் மிகவும் கொடியது. அணு ஆயுதம் அறவே இல்லாமல் அகற்றி இந்த பூமியை அமைதியின் மடியில் தவழவிடவேண்டும். வறுமை, அணு ஆயுதம் இல்லாத உலகை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்.
வருங்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல.... வாழ்க்கை யதார்த்தமும் அதுதான். ஆனால இந்த வரிகளை உணர்ந்தவர்களாக அத்தனை இளைஞர்களும்
உள்ளனரா? கேள்விக்கு பதில் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏன் இந்த முரண்பாடு.
எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்.மகிழ்வாய் இருக்கவேண்டிய வயது என இளைஞர்கள் நினைக்க துவங்கி விட்டனர்.ஒருசிலர் மட்டுமே தங்கள் கடமை இது அல்ல என உணர்ந்து செயல் படுகின்றனர்.இதற்கு என்ன காரணம்.சற்று சிந்தித்து பார்த்தால் தெரியும். சரியாக சிந்திக்காத ஒன்றே இதற்கு காரணம் என்று.அதனால்
இளைஞர்கள் நல் எண்ணங்களை மேம்படுத்த வேண்டும் கட்டாயமாக.
 இளைஞர்கள் எந்தவொரு சமூகத்தினதும் மிகப் பெரும் பலமாக உள்ளனர். முழு மனித வாழ்விலும் இளமையே அதி முக்கியமான பருவமாகும். நண்பகலில் நடுவானில் தோன்றும் சூரியனின் ஒளிக் கதிர்கள் போன்று புதுமையும் சக்தியும் கொண்ட அவர்களே ஒரு சமூகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். இளைஞர்களைப் பயிற்றுவிப்பதிலும் பண்படுத்துவதிலுமே ஒரு சமூகத்தின் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது

                                    நம் நாட்டில் தற்போது நாம்  மிகப்பெரும் சவால்களை சந்திக்கத் தயாராகĬ7;க் கொண்டிருக்கிறோம். இதை எதிர்கொள்ள தொழில் நுட்ப அறிவு கொண்ட இளைஞர் சமுதாயம் அவசியம்.இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஜூலியன் அசாங்கே ஒரு சில நாட்களிலேயே ħ3;லகத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர்.அவரிடம் இருக்கும் நல்ல விஷயத்தை மட்டும் பாருங்கள் எவ்வளவு பெரிய தொழில்நுட்பம், உலகில் உள்ள தலைகள் எல்லாம் எங்கே நம் weak கும் leak ஆகி விடுமோ என்று கலங்க வைத்தவர்.  அவரிடம் உள்ள ஒன்றுதிரட்டும் சக்தியை பாருங்கள். இதைப்போல நம் இளைய சமுதாயம் மாறவேண்டும்.இந்தியாவின் புதிய சரித்திரம் இளைங்கர்களின் கைகளில்தான் உள்ளது. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் இவன்தான் இளைஞன் என்று உலகம் கொண்டாடவேண்டும்.என்று கூறி நல்ல வாய்ப்பளித்த அனைவர்க்கும் நன்றி கூறி அமைகிறேன்.நன்றி வணக்கம்!    

செவ்வாய், 25 ஜனவரி, 2011

மனதைத் தொட்ட திரைப்படங்கள் - பகுதி 1

1. " Non ti Muovere  " - இத்தாலிய மொழிப்படம்.
                  






  நான் பார்த்த திரைப்படங்களிலேயே என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் ஒன்று.கதைப்படி ஒரு பணக்கார டாக்டர் தனது மகள்விபத்தில்அடிபட்டு மூளையில்அறுவை சிகிச்சை செய்யும்போது  வெளியே காத்திருக்கும் வேளையில், தன் ஆசைக்கு இணங்கி கர்ப்பமாக்கப் பட்டு வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலை சேரிப்பெண்ணின் வாழ்க்கையில் ,  தான் இருந்த நாட்களை நினைவு செய்து பார்ப்பது போல ஆரம்பிக்கிறது இந்த படம். சேரியில் வசிக்கும் பெண்ணாக Penélope Cruz . டாக்டராக செர்கியோ காஸ்டேல்லிட்டோ பின்னி பெடலேடுத்துவிட்டார். தற்போது வந்த  க்ராநிகில்ஸ் ஆப் நார்னியா படத்தில் வில்லன் கேரக்டரில் வருவாரே அவரேதான் . அதில் ஒரு காட்சி Cruz  கற்பப்பமாக இருப்பதை சோதிப்பார் டாக்டர் அந்த இடத்தில் இருவருமே அற்ப்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். சண்டை  வந்து பிரியும் போது கர்ப்பமானது கலைந்துவிட வேணும் என்று Cruz ஆடும் டான்ஸ் காட்சியின் முடிவில் கண்ணீர் வந்துவிடும். தான் பங்கேற்கும் ஒரு கான்பாரன்சிற்க்கு தன் மனைவி என்று அழைத்துப் போவார் அங்கே cruz இன் வெகுளித்தனமான நடிப்பிற்கு ஓர் சான்று அந்தக் காட்சிகள். எப்படியோ ஒரு நல்ல நெகிழ்வான படம் பார்த்த திருப்தியை தரும் படம் இது. ஆனால் இப்படம் வாழ்க்கையின் சாரத்தை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கு மட்டும்.

மீண்டும் மற்றுமொரு படத்துடன் சந்திப்போம். நன்றி.