வியாழன், 27 ஜனவரி, 2011

இன்றைய இளைஞன் - ( இதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )


சமூகத்தின் பிடிப்பற்ற தன்மையும் தூரநோக்கற்ற குறுகிய இலாப சிந்தையும் பலரிலும் மேலோங்கிக் காணப்படுவதனாலேயே இளைஞர் சமூகம் இன்றும் உதவிகளை எதிர்பார்த்து நிற்கவேண்டிய சூழ் நிலையில் உள்ளது.
எந்த வேளையிலும் பிறருக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் இன மத மொழி பேதமின்றி சேவை வழங்க முன்வரும் வேளையில் நல்லதொரு எதிர்காலம் தானாக வந்தடைவதற்கு வழி கிடைக்கும். முதலில்  சோம்பேறித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து இளைஞர்களும் முன்வரவேண்டும. அரசியல் இதற்க்கு சிறந்த வழி. ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் இதற்க்கு தயங்குகிறது. ஏனென்றால் படித்த இளைஞர்கள் அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய,தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரிய விரும்புவார்கள்.அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக்கொண்டது.அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம்.தவறான வழியாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்கும் பல சிரமங்களை கடந்தாக வேண்டும்.பல கீழ்த்தர விமர்சனங்களை கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே,அதெற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும். ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ ,அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும். இப்போது    ஒரு சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும் அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் படிக்காதவர்களா?  இதற்க்கு பதில் எனக்கு தெரியாது எனக்கேன் வம்பு.
  இளைஞர்கள் எதையும் சாதிக்கமுடியும். உலகில் 300 கோடி இளைஞர்கள், இந்தியாவில் 40 கோடி இளைஞர்கள் உள்ளனர். இளைய சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. புதியோர் உலகை படைப்பது இளைஞர்களின் கையில்தான் உள்ளது.
பெரியவர்கள் அமைதி கருத்தரங்கம் நடத்திவிட்டு பின் சண்டையிடலாம். ħ0;னால் இளையவர்கள் எல்லைகளைத்தாண்டி பரந்த மனப்பான்மையுடன் சிந்திப்பவர்கள்.
நவீன தொழில்நுட்ப யுகம் நாடுகளைத்தாண்டி மனிதர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதம்,பிரிவினைவாதம்,போர்,தண்ணீர் பற்றாக்குறை, தட்பவெப்ப மாறுதல்,வறட்சி போன்றவற்றை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடவேண்டிய நிலையில் உள்ளோம்.மேலும்
மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி வறுமைதான். கொடிய ஆயுதங்களை விட வறுமையும் மிகவும் கொடியது. அணு ஆயுதம் அறவே இல்லாமல் அகற்றி இந்த பூமியை அமைதியின் மடியில் தவழவிடவேண்டும். வறுமை, அணு ஆயுதம் இல்லாத உலகை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்.
வருங்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல.... வாழ்க்கை யதார்த்தமும் அதுதான். ஆனால இந்த வரிகளை உணர்ந்தவர்களாக அத்தனை இளைஞர்களும்
உள்ளனரா? கேள்விக்கு பதில் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏன் இந்த முரண்பாடு.
எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்.மகிழ்வாய் இருக்கவேண்டிய வயது என இளைஞர்கள் நினைக்க துவங்கி விட்டனர்.ஒருசிலர் மட்டுமே தங்கள் கடமை இது அல்ல என உணர்ந்து செயல் படுகின்றனர்.இதற்கு என்ன காரணம்.சற்று சிந்தித்து பார்த்தால் தெரியும். சரியாக சிந்திக்காத ஒன்றே இதற்கு காரணம் என்று.அதனால்
இளைஞர்கள் நல் எண்ணங்களை மேம்படுத்த வேண்டும் கட்டாயமாக.
 இளைஞர்கள் எந்தவொரு சமூகத்தினதும் மிகப் பெரும் பலமாக உள்ளனர். முழு மனித வாழ்விலும் இளமையே அதி முக்கியமான பருவமாகும். நண்பகலில் நடுவானில் தோன்றும் சூரியனின் ஒளிக் கதிர்கள் போன்று புதுமையும் சக்தியும் கொண்ட அவர்களே ஒரு சமூகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். இளைஞர்களைப் பயிற்றுவிப்பதிலும் பண்படுத்துவதிலுமே ஒரு சமூகத்தின் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது

                                    நம் நாட்டில் தற்போது நாம்  மிகப்பெரும் சவால்களை சந்திக்கத் தயாராகĬ7;க் கொண்டிருக்கிறோம். இதை எதிர்கொள்ள தொழில் நுட்ப அறிவு கொண்ட இளைஞர் சமுதாயம் அவசியம்.இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஜூலியன் அசாங்கே ஒரு சில நாட்களிலேயே ħ3;லகத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர்.அவரிடம் இருக்கும் நல்ல விஷயத்தை மட்டும் பாருங்கள் எவ்வளவு பெரிய தொழில்நுட்பம், உலகில் உள்ள தலைகள் எல்லாம் எங்கே நம் weak கும் leak ஆகி விடுமோ என்று கலங்க வைத்தவர்.  அவரிடம் உள்ள ஒன்றுதிரட்டும் சக்தியை பாருங்கள். இதைப்போல நம் இளைய சமுதாயம் மாறவேண்டும்.இந்தியாவின் புதிய சரித்திரம் இளைங்கர்களின் கைகளில்தான் உள்ளது. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் இவன்தான் இளைஞன் என்று உலகம் கொண்டாடவேண்டும்.என்று கூறி நல்ல வாய்ப்பளித்த அனைவர்க்கும் நன்றி கூறி அமைகிறேன்.நன்றி வணக்கம்!