செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஒரு அழகிய தமிழ் மகளின் டைரிக்குறிப்பில்.....

பொதுவாக அடுத்தவர்களின் டைரியைப் படிப்பது நாகரீகம் இல்லை என்றாலும் பழைய பேப்பர்காரனின் பையில் இருந்த டைரியை படித்ததில் தவறில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் எனக்கு ஒரு பெண்ணின் டைரியை படிக்கும் பாக்யம், இல்லை வாய்ப்பு கிட்டியது சுவாரசியமாக ஏதும் இல்லை என்றாலும் அதிலிருந்த ஒரு கவிதை நன்றாக இருந்ததால் அது உங்கள் பார்வைக்கு......


என்னவனே !
உன் பெயரை உச்சரிக்கிறேன்
என்னுள் ஏற்ப்படும் மாற்றத்தை உணர,
எல்லா உறவுகளுக்கும் எல்லை வரையறுக்கும் என்னால்,
உனது உறவுக்கு எல்லையிட தெரியவில்லை, முடியவில்லை,
இருவரின் எண்ணங்களைப் பார்க்கிறேன்
இதுதான் விட்டகுறை தொட்டகுறையோ,
எனக்கு ஓர் தணியாத ஆசை
என் கண்களுக்குள் உன்னை சிறை வைக்க,
பார்த்து பழகியது சில மாதங்கள் என்றாலும்
வாழ்ந்து முடிந்த பல வருடங்கள் கண்முன்னே,
உனது வெற்றிக்கு பின்னால்
நானிருக்க ஆசையில்லை
உனது வெற்றியாகவே நானிருக்க ஆசை,
உனக்கு தெரியுமா ? நான் ஒரு சுயநலவாதி!
என்னைத் தவிர உன்னை யாரும் நேசிக்க கூடாது என்பதில்,
இது தப்பில்லை அன்பை இப்படியும் காட்டலாம்
என்ற எனது கருத்தின்படி,  
உன் நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்த என்னை
உன்னையும் சுமக்க அனுமதிப்பாயா?
உனக்குத் தெரியும் எனக்கு
கவிதை எழுத தெரியாது என்று
இதை உனக்காக முயற்ச்சித்தேன்
எனக்கு தெரியவில்லை இது கவிதையா?.....

அன்புடன்.,
அழகிய தமிழ்மகள்.