திங்கள், 4 ஆகஸ்ட், 2014

மாக்கான்'ஸ் மைன்ட் வாய்ஸ்

அய்யா இலவசமாக நிலம் கொடுத்தாரு., அம்மா அதுல பசுமை வீடா இலவசமாக கட்டி கொடுத்தாங்க, மாசா மாசம் இலவசமாக அரிசி கிடைக்குது., என் சொந்த அம்மாவுக்கு மாசா மாசம் ஓய்வுத் தொகை கிடைக்குது அதுல மலிவு விலைல மளிகை வாங்கிடலாம், என் குழந்தைகளுக்கு படிப்பு செலவே இல்ல செருப்புல இருந்து லேப்டாப், சைக்கிள் வரை இலவசமாக கிடைக்குது., கைச்செலவுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப இலவசமாக ஆடு கொடுத்தாங்க, எங்க வீட்ல வசதி இல்லனு எவன்யா சொன்னது., மிக்ஸி, கிரைண்டர், டேபிள் பேன், கேஸ் ஸ்டவ், வண்ணத் தொலைக்காட்சி எல்லாமே இலவசமாக வாங்கிட்டம்ல., என் பையன் படிச்சுட்டு சும்மா இருக்காப்ல அவன் பாக்கெட் மணிக்கு மாச மாசம் உதவித்தொகை வேற கொடுக்கறாங்கப்பா., பொண்ணு கல்யாணத்துக்கு சம்பாதிக்கனும்னு எனக்கென்னங்க இருக்கு.? அதான் தாலிக்கு தங்கம் இலவசமாம்ல., அம்மா உப்பத்தான் தினமும் திங்கறோம்., வீட்ல சாப்பிட்டு போர் அடிச்சா, அம்மா உணவகத்துல அஞ்சு ரூவாய்கு வயிறு நிறைய சாப்புடறோம்., வெளிய போனா அம்மா தண்ணியத்தான் வாங்கி குடிக்கறோம்., இவ்வளவையும் கொடுக்கும் போது நாங்கல்லாம் என்ன ம... னாவுக்குங்க வேலைக்கு போகனும்.?
அப்படியே வேலைக்கு போறம்கற பேருல சும்மா உட்கார்ந்து நூறு நாள் வேலைத்திட்டதுல போனாலும், அந்த காச அப்படியே அம்மா சாராய கடைல (டாஸ்மாக்) போடரதுதானுங்க நியாயமானது, அதாங்க தர்மம்.

( இது சிரிப்பதற்காக மட்டும் அல்ல., இலவசமாக அனைத்தையும் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கும் திராவிடக்கட்சிகளின் தோலை உரிப்பதற்காகவும்தான்.... நோட்டை வாங்கிவிட்டு ஓட்டை போட்டு தங்கள் வாழ்க்கையை கோட்டைவிடும் மானம் கெட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு எப்போது. ? )
L