திங்கள், 4 ஆகஸ்ட், 2014

நான் யார்...?

எலும்பும் சதையுமாக
நரம்பும் தோலுமாக
ஆக்கப்பட்டவனா நான்...?
அல்லது....
அன்பும் கருணையுமாக
நேசமும் பாசமுமாக
கொண்டவனா நான்.....?

இல்லை நிச்சயமாக இல்லை...

மனிதனுக்கு இட்ட எல்லைகள்
எனக்கு கிடையாது....
எல்லையற்ற பிரபஞ்சமே
என் உறைவிடம்.....
வரையறைகள்
எனக்கும் கிடையாது
கடவுளுக்கும் கிடையாது....

ஏனென்றால்....

நான் கடவுள்..!

அன்புடன்,
Sathish Kumar