திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சிந்தனை சிதறல்கள்

இன்று அதிகாலை நான்கு மணிக்கு நான் தூக்கம் களைந்தவனாக யோசித்த விஷயம் இது, உலகத்திலேயே மிக அற்புதமான இயந்திரம் எது தெரியுமா,?

நம் உடல்தான். இயக்கத்திற்கான சக்தியை உணவிலிருந்து பெற்று, 24 மணிநேரமும் இதயம் எனும் இஞ்சினை இயக்குகிறது, ஏர் கம்ப்ரசர் வேலையை நுரையீரல் செய்கிறது. கட்டளை பிறப்பிக்கும் வேலையை சிபியூ போல நம் மூளை செய்கிறது, உடலெங்கும் சென்சார் யூனிட்டுகளாக நம் நரம்புகள், இவை அனைத்தையும் கொண்ட அற்புத இயந்திரம் நாம். ஆனால், நாம் அந்த இயந்திரத்தை ஒழுங்காக செயல்பட விடுகிறோமா,? நெல்மணிகள் அதிகமாக விளைய விஷமிட்டு வளர்க்கிறோம் அதே ஸ்லோ பாய்சனை நாமும் உண்டு நம் குழந்தைகளுக்கு தெரிந்தே கொடுக்கிறோம். இது ஒழுங்காக ஓடும் இயந்திரத்திற்கு பெட்ரோல் உடன் தாரை கலந்து ஊற்றுவது போலாகும்.
ஆகவே விவசாயிகளே, ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை இடுங்கள், நம் உடல் இயந்திரத்தை பேணிக்காப்பாற்றுங்கள்....

( எங்க ஆரம்பிச்சு எங்க போய் முடிக்கிறான் பாருயா,? இப்ப இன்னாபா சொல்றனு, நீங்கல்லாம் நெனிகிறது தெர்து... இன்னா தல பண்றது, தூக்கம் வரல, எதுனா எய்திதான ஆகனும்)