திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சிந்தனை சிதறல்கள்

வாழ்க்கையில் தோல்விகளுக்கு காரணம் விதியா.? மதியா.?
தோல்விகளுக்கு உலகம் தரும் ஒரே மருந்து தன்னம்பிக்கை....
தன்னையே நம்பாதவனுக்கு தன்னம்பிக்கை எப்படி வரும்.?

வெற்றிக்கு மதி காரணம் என்றால்
வீழ்ந்தவனுக்கு மட்டும் விதி சொந்தமா.?
எண்ணியதெல்லாம் எண்ணியபடி நடந்துவிட்டால் 
எண்ணியவனெல்லாம் கடவுள் ஆவான்.
பண்ணிய கர்மவினை என்றால்
தர்மம் இருந்து என்ன பயன்.?
பலரின் தோல்விகள் ஒருவனுக்கு வெற்றியாகிறது...
உன் வெற்றிக்கு காரணம் கடவுள் என்றால் பலரின் தோல்விகளுக்கும் காரணம் கடவுள்தான்....
பாவ புண்ணிய கணக்கை கூட்டிக்கழித்துப் பார்க்க கடவுள் என்ன கணக்குப்பிள்ளையா.?
பத்து ரூபாயை உண்டியலில் போட்டு குடும்பத்திற்கே மொட்டை போட்டால் கடவுள் வெற்றியை மட்டும் அளிப்பான் என்று சட்டம் உண்டா.?

ஆக., வெற்றியோ தோல்வியோ அனைத்திற்கும் நாம்தான் காரணம்...
சரியான நேரத்தில் சரியான கோணத்தில் சிந்திப்பவன் அதனை சரியான சூழ்நிலையில் பயன்படுத்துபவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்......

'உன்னயெல்லாம் இப்டி பேச சொல்லி யார்டா சொன்னது ' ன்னு கவுண்டமணி ரேஞ்சுல பல்ல கடிக்கறது நல்லா தெரியுது. .... என்ன பண்ணறது எல்லாம் விதி.......