திங்கள், 4 ஆகஸ்ட், 2014

நினைவுகள்

இளவேனிற்காலத்து அந்திமாலை நேரம்....
சில்லென்ற குளிர் காற்று முகத்தை வருடுகிறது.....
அன்றலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் அருகே நீ.....
அதிகாலை நேரத்து பனித்துளியாய் உன் ஸ்பரிசம்...
ஜன்னல் ஓரத்துக் காட்சிகளாய் நினைவுகள் பயணிக்கிறது.....
இருவரின் கண்களும் சங்கமிக்கிறது ஸ்பஷ்டமாக....
கைகள் மலர்க் கொடி போல பின்னிக் கொண்டன.....
இருவரின் உயிரும் கண்களின் வழியே கூடுவிட்டு கூடுபாய தொடங்கியது.....
உயிரே உணர்விற்குள் கலந்துவிட்ட போது இதழ்கள் மட்டும் ஏமாந்துவிடுமா?....

"அட பரதேசி...! மணி எட்டு ஆகுது இன்னும் எந்திரிக்காம என்னடா தூக்கம்? இவனும் இவன் வேலையும்,.... "

ஹூம்ம்.... கனவா இது..... ஓசை இல்லாமல் பாயை சுருட்ட ஆரம்பித்தேன் நான்.......

அன்புடன்,
SATHISHKUMAR. A