திங்கள், 4 ஆகஸ்ட், 2014

எனது ஆட்சியில்.....

1. மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். நாடெங்கும் ஒரே கல்விமுறை பின்பற்றப்படும்.

2. மறைநீர் ( virtual water ) அதிகமாக பயன்பாடு உடைய தொழில்கள் கண்டறியப்பட்டு அவை உள்நாட்டில் மட்டும் இயங்க வழிவகை செய்யப்படும்....

3. நாடெங்கும் இட ஒதுக்கீடு முறை அறவே ஒழிக்கப்பட்டு திறமை மட்டுமே முன்னிருத்தப்படும்.

4. ஒவ்வொரு குடும்பமும் தலா மூன்று மரங்களையாவது கட்டாயமாக வளர்த்தால்தான் குடும்ப அட்டையில் பொருட்கள் வழங்கப்படும்.

5. சுய லாபம் கருதி கடமையை செய்யாமலிருப்பவர்கள் மற்றும் கடமையை மீறுபவர்களுக்கு முதல் முறைமட்டும் மன்னிப்பு வழங்கி தேசதுரோகி பட்டம் இலவசமாக வழங்கப்படும்.

6. இலவசங்கள் அறவே ஒழிக்கப்பட்டு மக்களை உழைத்து அவற்றை எளிதாக பெற்றிட தகுந்த திட்டங்கள் தீட்டப்படும்.
7. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் மீட்கப்பட்டு அவற்றில் இராணுவ தளவாடங்கள் வாங்கி உலகின் மிகச் சிறந்த இராணுவமாக நம் இராணுவம் ஆக்கப்படும்.


1. சர்ச் பார்க் கான்வென்ட் ல் படிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி மஞ்சக்கோணாம்பாளையம் மாரப்பன் மகனுக்கும் கிடைக்கும்.

2. 50 $ = 1 ₹ என்ற நிலை வரும்.

3. கோவிலில் சிறப்பு தரிசன முறை ஒழிக்கப்படும்.

4. லஞ்சம் வாங்கியது நிருபிக்கப்பட்டால் வலது கை கட்டைவிரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட சட்டம் பிறப்பிப்பேன். (டாக்டர் பீசை அந்த கபோதியிடமே இரண்டு மடங்கு கறக்க வேண்டும்)

5. பெர்டிலைசர் கம்பெனிகளை இழுத்து மூடிவிட்டு, இயற்கை விவசாயத்தை கட்டாயமாக்குவேன்.