திங்கள், 30 நவம்பர், 2009

தமிழ் சினிமாவின் சாபக்கேடு - விஜய்

                                  ஒரு மாநிலத்தினுடைய தலைஎழுத்தை நிர்ணயிக்கின்ற ஒரு சக்தி வாய்ந்த துறையைப் பற்றி எழுதுவது ஒன்றும் வெட்டிவேலை இல்லை என்றே நினைக்கின்றேன். அத்தகைய சிறப்பு வாய்ந்த துறை இன்று வரம்புகளை மீறிய, நடைமுறை யதார்த்தத்தை சிறிதும் கண்டுகொள்ளாத ஒரு ஊடகமாகவே தற்போது ஆகிவிட்டது.  எம் ஜி ராமச்சந்திரன், மு கருணாநிதி, ஜெ ஜெயலலிதா போன்றோரின் அபரிதமான வெற்றிக்கு காரணமான தமிழ் சினிமா சில அப்பட்டமான எதார்த்த மீறல்களையும் கொண்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத காலத்தில் சினிமாவின் தாக்கம் ஸ்பஷ்டமாக இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இன்று இருக்கின்ற தொழில் நுட்பத்தில் தாக்கம் அனைத்தும் தவிடுபொடி ஆகியிருக்கவேண்டும்.
                                   ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய் அவர்களின் படங்களுக்கு வரும் வரவேற்பைப் பார்க்கும்போது தாக்கம் இன்னும் திண்ணமாக உள்ளது என்றே தோணுகிறது. அன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்த எம் ஜி ராமச்சந்திரன்,சிவாஜி கணேசன் போன்றோர் தங்கள் படங்களில் சமுதாய நல்லிணக்க கருத்துக்களையும், சுய ஒழுக்கத்தையும் போதித்தனர். மக்களும் அவற்றைப் பார்த்து குறிப்பாக எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் தான் நடித்த ஒரு படத்தில் கூட புகை பிடிப்பது போலவோ மது அருந்துவது போலவோ காட்சிகளை  அமைக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் இன்று அப்படி உள்ளதா சரக்கடிப்பது என்ற விஷயத்தை ஏதோ திரிகால சந்தியாவதனம் செய்வது போல ஒரு சடங்காகவே ஆக்கிவிட்டனர் இன்றைய தமிழ் சினிமாவின் சிற்பிகள். இன்று வரும் ஒரு படத்திலாவது இந்த வார்த்தை இல்லாமல் உள்ளதா?
                                    இதற்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் என்றால் இந்த கேடுகெட்ட படங்களுக்கெல்லாம் மூலம் திருவாளர் விஜய் அவர்களின் படங்களே! நீங்கள் கேட்கலாம் ஏன் மற்ற படங்கள் இல்லையா என்று, அதாவது முன்பு எம் ஜி ஆர் நடித்ததைப் போன்று தானும் சொந்தவாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தவர்கள் பலர். ஏனென்றால் ஒரு பெரிய இமேஜை கொண்டிருக்கிற ஹீரோக்கள் தமிழ் சினிமாவை மூச்சாக, வாழ்வில் ஓர் அங்கமாக எண்ணும் பல ரசிகர்களையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்தால் இவர்களும் செய்வார்கள். அன்று எம் ஜி ஆர் ஏழைகளுக்கு உதவினார் பலரும் உதவினார்கள். இன்று விஜய் சரக்கடிக்கிறார் பலரும் சரக்கடிக்கிரர்கள். அதற்க்கு ஏற்றது போல இன்று அரசு சரக்காட்சி நடத்துகிறது சரி அதை விடுங்கள். திருவாளர் விஜய் அவர்களின் மற்றுமொரு சகிக்க முடியாத வசனம் என்னவென்றால் " நா கண் அசைச்சா போதும் என் பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க " என்பது, இதை கைதட்டி அராவரித்து புளகாங்கிதம் அடைகிறது இன்றைய இளைஞர் பட்டாளம், இவர்களின் சொந்த சகோதரிகளும் அந்த ஆயிரம் பெண்களில் அடக்கம் என்பது தெரிந்தும்.இந்த வெட்கக் கேட்டில் அஜித், சிலம்பரசன், இன்னும் பல நடிகர்களும் அடக்கம்.
                                           அது சரி நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இவருக்கு ரவுடி வேஷத்தை விட்டு வேறு எந்த வேஷமும் கிடைக்காதா? இவரின் ஆரம்ப கால படங்கள் முதல் இன்றுவரை வித்தியாசமாக ஏதும் செய்தது கிடையாது. இந்த லட்சணத்தில் இவருக்கு போட்டி வேறு. அஜித் ரசிகர்களும் இவரின் பதாகைகளும் மோதிக்கொள்கின்றன  இதைவிட கேவலம் தமிழ் நாட்டிற்கு வேறு ஏதும் வேண்டுமா? இன்னொரு விஷயம் காதல். அடடா இவர் காதலுக்கு செய்கின்ற தியாகம் இருக்கின்றதே அந்த 'ஷாஜகான் மும்தாஜ் ' லைலா மஜ்னு ' இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும். இவரின் உயிரைக் குடுத்தாவது இந்த காதல் *யிரை காப்பாற்றி விடுவார். அழகி, சொல்லமறந்த கதை, ஆடோகிராப், பசங்க, பூ, மல்லி,கஸ்தூரிமான்,இந்தியன், ரோஜா, நாயகன் போன்ற மிகச்சிறந்த உலக திரைப்படங்களுக்கு சவால் விடும் படங்களின் வருகையின் மத்தியில் விஜய்யின் படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒரு திருஷ்டிப்பொட்டு.