காலம் மாறுகிறது
காட்சிகளும் மாறுகிறது
மனமும் மாறுகிறது
தினமும் மாறுகிறது
விளைவில்லா வார்த்தைகள் கூட
நொடிக்கு நொடி மாறுகிறது
மனிதனும் மாறுகிறான்
மனைவிகூட மாறுகிறாள்
உயிரில்லா பணத்திற்கு
உயிரைக் கூட தருகிறோம்
நேசித்த நெஞ்சங்களை
நிர்கதியாக்கி விடுகின்றோம்
கருப்பும் வெள்ளையாகிறது
களையும் கலைந்து விடுகிறது
இளமையது மூப்பாகும்
கைத்தடி காப்பாகும்
காலன் வந்து கரம் பிடிப்பான்
காயமதனைக் கரி திங்கும்
மேலே வானம் கீழே பூமி
நடுவில் எங்கிருந்து வந்தது சாதி
நிறமும் இனமும் வேறென்றாலும்
மனிதன் என்னும் மகத்துவம் மாறுமா.?
அன்பும் கருணையும் வழி என்றால்-உன்
வாழ்வையும் வழியையும் சரித்திரம் கூறுமே.!
மாற்றங்கள் இல்லாமல் வையம் இல்லை
வையத்து மாற்றங்கள் நம்மால் நிகழட்டும்..
ஏனென்றால்.,
மாற்றம் ஒன்றே நிலையானது.
அன்புடன்
Sathish Kumar
காட்சிகளும் மாறுகிறது
மனமும் மாறுகிறது
தினமும் மாறுகிறது
விளைவில்லா வார்த்தைகள் கூட
நொடிக்கு நொடி மாறுகிறது
மனிதனும் மாறுகிறான்
மனைவிகூட மாறுகிறாள்
உயிரில்லா பணத்திற்கு
உயிரைக் கூட தருகிறோம்
நேசித்த நெஞ்சங்களை
நிர்கதியாக்கி விடுகின்றோம்
கருப்பும் வெள்ளையாகிறது
களையும் கலைந்து விடுகிறது
இளமையது மூப்பாகும்
கைத்தடி காப்பாகும்
காலன் வந்து கரம் பிடிப்பான்
காயமதனைக் கரி திங்கும்
மேலே வானம் கீழே பூமி
நடுவில் எங்கிருந்து வந்தது சாதி
நிறமும் இனமும் வேறென்றாலும்
மனிதன் என்னும் மகத்துவம் மாறுமா.?
அன்பும் கருணையும் வழி என்றால்-உன்
வாழ்வையும் வழியையும் சரித்திரம் கூறுமே.!
மாற்றங்கள் இல்லாமல் வையம் இல்லை
வையத்து மாற்றங்கள் நம்மால் நிகழட்டும்..
ஏனென்றால்.,
மாற்றம் ஒன்றே நிலையானது.
அன்புடன்
Sathish Kumar