ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இது எங்க வீட்டு கொலு....

தச மஹா வித்யா - 2

                                     நமது எண்ணங்களே நம்மை வழி நடத்திச் செல்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. நான் நவராத்ரி, கொலு, தசமஹாவித்யா போன்ற விஷயங்களில் நான் கடந்த ஐந்தாறு நாட்களாக அறிவைப் பெற்று வருகின்றேன். என் இணைய தேடல்கள் பெரும்பாலும் இவற்றைப் பற்றித்தான் இருந்தன.நடைமுறையில் கூட வாழ்வியலில் கொலு பற்றிய அனுபவ அறிவு எனக்கு சிறிது ஏற்ப்பட்டது. அதன் விளைவுதான் கீழே நீங்கள் பார்க்கும் கொலு காட்சி.இது எங்க வீட்டு கொலு......


                                                  
                                                        














 அஷத்தோமா சத் க்ரமய !! 

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பெண்மையை போற்றுவோம் !

தச மஹா வித்யா

                        தயவு செய்து யாருப்பா அந்த வித்யா ன்னு கேட்டுடாதீங்க.இதுக்கு அர்த்தம் என்னான்னா, தசம் என்றால் பத்து அதாவது திசைகள் எட்டு மேலும் கீழும் இரண்டு ஆக மொத்தம் பத்து.இந்த பேரண்டத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் அதன் ஆக்க சக்தியும் பத்து விதமான நிலைகளில் இருக்கின்றது என்பது பொருள்.இந்த பிரபஞ்சம் நம் உடல் என்று பொருள் கொண்டால் அந்த பத்து விதமான சக்தியும் நம் உடலிலும் இருக்கும். அதனை வழிபடவே இந்த தசமஹா வித்யா என்னும் அறிவு பயன்படுகிறது.
                         இதன் காரணமாகத் தான் பெருமாள் பத்து அவதாரங்கள் எடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார் என்று கூறுவார்கள். தச மகா வித்யா  என்ற இந்த பகுதியை விளக்க அற்பமான அடியேனால் முடியவே முடியாது. இதை விளங்கிக் கொள்வதற்கும் தகுதியை நம்மில் பலர் பெற்றிருக்கவில்லை.விரிவாக தெரிந்துகொள்ள இதே தளத்தில் உள்ள vedic eye என்ற இணைப்பை பார்வையிடவும்.
                           என் சிற்றறிவுக்கு எட்டியவரை சக்தி சொரூபமாகிய பெண்ணை போற்றும் ஒரு விழாவாக இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முழுவதும் பெண்களை மையமாக வைத்து அவர்களுடைய அறிவுத்திறனையும் கலை ஞானத்தையும்  மெய்ப்பிக்கும் விதமாக இப்பண்டிகை அமைந்துள்ளது. ஆடல் பாடல் சுவையான சுண்டல்  கொலு பொம்மைகளை அடுக்கும் நேர்த்தி என்று பெண்களின் மொத்த அறிவையும் இந்த விழாக்களில் காணலாம்.எது எப்படியோ இது போன்ற விழாக்கள் நடைபெறும் போதுதான் பரஸ்பரம் மனிதர்கள் கூடி தங்களுக்குள்ளான மனிதத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.முடிந்தவரை வீட்டிலேயே கொண்டாலாம் முடியவில்லை என்றால் அருகிலுள்ள கோவில்களில் கண்டிப்பாக கொலு வைத்திருப்பார்கள் அங்கே கலந்து கொள்ளலாம். அனைவரும் அன்னையின் அருள் பெற்று இன்புற்று வாழ்வோமாக !!
நவராத்திரி கொண்டாடுவோம் !                                பெண்மையை போற்றுவோம் !!        

சனி, 22 ஆகஸ்ட், 2009

அமானுஷ்யம்

அன்பு நண்பர்களே,
மானுட வாழ்வில் அமானுஷ்யம் என்பது எக்காலத்திலும் உள்ளவை. அவை நாம் கண்டறிந்த தொழில்நுட்ப வசதிகளால் பதிவு செய்ய முற்படும் போது அதில் மறைந்திருக்கும் உண்மைகளை நம்மால் சரிவர உணர முடிவதில்லை.அதில் ஒன்றுதான் கீழே நீங்கள் பார்க்கும் படக்காட்சி.நினைத்தாலே முக்தி அருளும் திருவண்ணாமலை காட்டில் சித்தர் ஒருவர் பறப்பதை படமாக்கி உள்ளனர். பாருங்கள்....( படத்திற்கான சுட்டி இங்கே உள்ளது யு டியூப் ஐ டி உள்ளவர்கள் மட்டும் பார்க்க இயலும் )