செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கானல் நீர் - அத்யாயம் 3



கானல் நீர் - அத்யாயம் 3
பஸ்ஸிலிருக்கும் சிலர் இறங்கிச் சென்ற நிலையில் இறங்கி ஏதேனும் சாப்பிடலாமா என்ற யோசனைக்கு இடமளிக்காமல் மனதில் ஏதோ நினைவுகள் ரகுவை பலவீனப்படுத்தியது போலத் தோன்றியது.
இருக்கையிலேயே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட ரகு திரும்பவும் நினைவுகளில் மூழ்குகிறான்.
சொல்லிக் கொள்ளாமல் சென்றுவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்த சீதாவின் போனில் நீண்ட நேரத்திற்குப் பிறகு இப்போது தான் ரிங் போகிறது.. நெஞ்சில் ஒரு பதட்டம் நிலவ, அடித்தொண்டை காய்ந்து விட பலத்த சிரத்தையுடன் எதிர் கொள்கிறான் ரகு.
"ஹலோ.." எதிர் முனையில் சீதாவேதான்.
" சீதா.... என்னடி எங்க போன...? போன் பண்ணினா எடுக்கமாட்டேன்ற... சுவிட்ச் ஆப் பண்ற... என்னப்பா ஆச்சு எங்க இருக்க...? "
" ஸாரி ரகு.. நைட் நாம பேசி முடிச்சதுக்கு அப்பறம் சித்திக்கு ரொம்ப உடம்புக்கு முடியலன்னு போன் வந்தது. அவங்கள மதுரைல கென்னட் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்கப்பா.. அதனால நான் அவசரமா கிளம்பி வரவேண்டியதா போய்டுச்சு.. உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டன்னுதான் கூப்டல.. காலைல இருந்து ஐ சி யூக்குள்ள இருந்ததால போன் எடுக்க முடியல. இப்பதா வெளிய வந்திட்டு கால் பண்றேன்... "
ரகு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு " நான் ரொம்ப பயந்துட்டேன் சீதா.காலைல எப்பவும் போல கூப்டேன். நீ எடுக்கலன்னதும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு மா... சரி, உன் நிலைமைல பார்த்தா உன்ன தப்பு சொல்ல முடியாது. பரவால்ல விடு... ஓகே சித்தி இப்ப எப்படி இருக்காங்க..?"
" ஹூம்ம்... இப்ப பரவால்லப்பா... நாளைக்கு ஐ சி யூல இருந்து வார்டுக்கு மாத்திடுவாங்க.."
" சரிமா... சாப்டியா.?. "
" இம்.. சாப்டேன். நீங்க சாப்பிடிங்களா.?"
" ஆமா இவங்க சொல்லாம கொள்ளாம திடீர்னு காணாம போவாங்களாம் அந்த நேரத்துல நாங்க சாப்டனுமாம்... போடிங்க... ஏதாவது சொல்லிட போறேன்... "
" ஹேய். .. என்ன ரகு நீங்க இதுக்கல்லாமா சாப்பிடாம இருப்பாங்க.. முதல்ல போய் சாப்பிட்டு வாங்க.. மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்."
" சரி சீதா நான் போறேன்... மணி ஆறு ஆகிடுச்சு.. ரொம்ப பசிக்குதுப்பா. அங்க உன் அப்பா அம்மா சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்களாம்மா.?
" அவங்க எதுக்குப்பா இங்க..?"
"என்ன சீதா சொல்ற.. உன் சித்திக்கு பிரச்சனைன்னா அவங்க எல்லாம் வருவாங்கதான"
" அடச்சே... சொல்ல மறந்துட்டேன். என் ப்ரண்ட் மீனு இருக்கால்ல அவளோட சித்திக்குத்தான் சீரியஸ். நாங்க ரெண்டு பேரும்தான் கம்பெனி ஹாஸ்டல்ல இருந்து கிளம்பி வந்தோம். "
ரகுவின் மண்டையில் சுர்ரென்று ஏதோ ஏறியது போல் இருக்க..
" அப்போ உன் சித்தி இல்லயா.? இதுக்கா இவ்ளோ கலவரம். ? என்கிட்ட சொல்லாம வந்தது யாரோ ஒருத்திக்காகவா.? என்ன சீதா நீ இப்டி இருக்க.? திஸ் ஈஸ் ப்யூர்லி மேட்னஸ் சீதா..."
" ஸீ ரகு... நான் யாரோ ஒருத்திக்காக வரல.. மீனு என் பெஸ்ட் ப்ரண்ட். அவ சித்தி என் சித்தி மாதிரி.. அதனாலதா வந்தேன். உங்ககிட்ட சொல்லாம வந்தது வேணும்னு செய்யல சந்தர்ப்பம் அந்த மாதிரி ஆகிடுச்சு. தட் ஈஸ் இட் ரகு. "
கோபம் கொப்பளிக்க ரகு" உன்னல்லாம்... ச்சே.... இங்க ஒருத்தன் எவ்வளவு துடிச்சு போய் பதறிட்டு மதியம் சாப்பாடு கூட இல்லாம உனக்காக தவிச்சிட்டு இருக்கேன்... ஆனா நீ... ரொம்ப கேசுவலா அவளோட சித்தினு சொல்ற..."
" ரகு ப்ளீஸ். இப்ப நான் உள்ள போகனும் ஏதோ உங்ககிட்ட நடந்தத சொல்லிடலாம்னு மீனுகிட்ட சொல்லிட்டு வந்தேன். நீங்க போய் முதல்ல சாப்பிடுங்க ரகு அப்பறம் நம்ம சண்டையை வச்சுக்கலாம்... ப்ளீஸ் ப்பா... நான் மறுபடி
வெளிய வந்துட்டு கூப்பிடுறேன். ஓகேவா..? " என்று சீதா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாவல் போனை வைத்துவிட..
ரகு சாப்பிட்டு விட்டு போனை எதிர் நோக்கி காத்திருக்கிறான்.நரகத்தை விட கொடுமையானது காதலில் காத்திருப்பதுதான் என்பதை ரகு உணர்ந்து கொண்டிருக்கிறான்.
மணி ஏழரை போன் ஒலிக்க முதல் ரிங்கிலேயே எடுக்கிறான் ரகு.
" ஹலோ.. என்ன என் வீட்டுக்காரருக்கு கோபம் போய்டுச்சா.? " சமாதான நோக்கத்தில் ஆரம்பித்தாள் சீதா.
" ஆமா.. இதுக்கு ஒன்னும் குறை இல்ல.. சரி எப்போ கிளம்ற சீதா. ?"
" என் தம்பி அதாவது என் சித்தப்பா பையன் வந்து எங்கள அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொல்லிருக்கான்.. அங்க போய் சாப்டுட்டு அப்டியே ஆரப்பாளையம் பஸ்டேன்ட்ல கொண்டு விட்டுறுவான் அவனுக்காகதான் நானும் என் இன்னொரு ப்ரண்ட் ப்ரீத்தாவும் வெய்ட் பண்றோம்."
" ப்ரீத்தாவா ஓ..! அந்த பொண்ணா அவ கொஞ்சம் சரியில்லை ன்னு ஆபீஸ் ல எல்லாரும் சொல்வாங்க மா.. அவ கூடவா இருக்க.."
" உங்களுக்கு அவள பிடிக்காதுன்னு தெரியும் தங்கம்.. என்னப்பா பண்றது.. அவ இங்க வந்துட்டா போடின்னா சொல்ல முடியும். ?"
" ஓகே சீதா பாத்து வாங்க... ஏதோ அவசரத்துல கோபபட்டு பேசிட்டேன். ஸாரிடி தங்கம்"
" பரவால்லப்பா... என் அம்முவ எனக்கு தெரியாதா? நீங்க சாப்பிட்டாச்சா?"
"ம்.. ஆச்சு"
" இனிமேல் என் செல்லத்துக்கிட்ட சொல்லாம எங்கயும் போகமாட்டேன் சரியா.?"
"........ "
"இன்னொன்னு ரகு... பேட்டரி போன்ல வீக்கா இருக்கு எப்போ வேணாலும் ஆப் ஆகலாம்... உடனே பதறிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதீங்க சரியா ?"
" சீதாக்குட்டி பஸ் ஏறினதும் கால் பண்ணிடு இல்லன்னா மனசு கேட்காதுப்பா... ப்ளீஸ்.."
"கண்டிப்பா பண்றேன் பா... இன்கேஸ் பண்ணமுடிலனா அப்செட் ஆகாதீங்க.. நான் எப்படியும் காலைல எப்பவும் போல ஆபீஸ் வந்திடுவேன் சரியா..? "
"சரிப்பா... பாத்து பத்ரமா வாங்க.. "
" ஐயோ கடவுளே! நாங்க என்ன சின்ன குழந்தையா ப்ரீத்தாவும் இருக்கா ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா...இதே மதுரைக்கும் திருப்பூருக்கும் பஸ்ஸே நாங்கதா விட்றுக்கோம்.. விடுங்க பாஸ்.. "
" ஹா.. ஹா... ஓகே டியர் பை.. ஹேவ் எ சேப் ஜர்னி..."
" தேங்ஸ் டார்லிங்... இதோ தம்பியும் ப்ரீத்தாவும் வர போறாங்க நா வைக்கறம்ப்பா.. பை.."
ரகுவின் மனதிற்குள் பெருமையுடன் கூடிய சந்தோஷம் பிரவாகமெடுத்திருந்தது..
தன் வாழ்க்கைத்துணை இபபடித்தான் தைரியம் மிக்கவளாகவும் எதையும் எதிர் கொள்பவளாகவும் எதிர்பார்த்திருந்தான் அது தன் கண்கூடாக தெரியும் பொழுது யாருக்குத்தான் பொங்காது..
ஆனால் அது கொஞ்ச நேரம் கூட நிலைக்காது என்பதை ரகு அப்போது அறிந்திருக்கவில்லை.
மணி பத்தாகியது சீதா இன்னும் கால் செய்யாததால் நாமே கூப்பிடுவோம் என்று நினைத்து அழைக்க எடுத்தது சீதா.
" அம்மா.. நாங்க பஸ்டேன்ட்ல இருக்கோம். இதோ கிளம்பிட்டோமா.. பயப்படாதீய.. நான் ஹாஸ்டலுக்கு போனதும் டயர்ட்ல தூங்கிடுவேன். காலைல நா கூப்டறமா... வைக்கறேன்.." என தன் அம்மாவிடம் பேசுவது போல பேசி போனை கட் செய்தாள் சீதா.
இதிலிருந்து ப்ரீத்தாவும் அந்த தம்பியும் கூட இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட ரகு, அப்படியும் மனசு கேட்காமல் பதினோரு மணிக்கு இப்போது கண்டிப்பாக பஸ் ஏறியிருப்பார்கள் என்று மீண்டும் கால் செய்ய ரிங் ஆகி கட்டாகியது. இப்படியே ஐந்தாறு முறை செய்யவும் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் என்று சொல்லியது செல்போன்.
சரி அதான் பேட்டரி தீர்ந்து விட்டது என்று சொன்னாளே என நினைத்தபோது ஒரு விஷயம் பொறி தட்டியது.
சீதாவினது செல்லில் பேட்டரி இல்லை ஆப் ஆகிவிட்டது என்று சொல்வது இதுதான் முதல்முறை இதற்கு முன்பு சீதா இப்படி சொல்லியதில்லை. அப்படியே ஆப் ஆகியோ அல்லது சார்ஜ் குறைவாகவோ இருந்தாலும் அந்த தம்பி வீட்டில் சாப்பிடும் நேரத்தில் போட்டிருக்கலாம்.
தலையில் இரண்டு கொம்பு முளைத்ததைப் போன்று உணர்ந்தான் ரகு.
ஆல் ரைட் இப்போது என்ன செய்வது.
தன் மொபைலில் இருந்து ஸாரி சீதா என்று டைப் செய்து சீதாவிற்கு மெஸேஜ் அனுப்பினான் ரகு.
இதனால் எப்போது சீதா மொபைல் ஆன் செய்தாலும் உடனே மெஸேஜ் சென்ட் ஆகி டெலிவரி ரிப்போட் ரகுவின் செல்லிற்கு வரும்.
அனுப்பிவிட்டு காத்திருந்தான் ரகு. தூக்கம் லேசாக வந்த வேளையில் டிங்.. டிங்... டிங்.. டிங்..
என்று டெலிவரி மெஸேஜ் வந்ததும் மணியைப் பார்த்தால் மணி 12:30.
கால் செய்தபோது முதல் இரண்டு செகண்டிலேயே ரிங் கட் செய்யப்பட... இதயத்தில் அதிர்ச்சியை உணர்ந்தவனாக திரும்ப அழைத்த போது முதல் செகண்டில் எடுக்கப்பட்டது..
" ஹலோ சீதா...!.."
எதிர் முனையில் பதிலில்லை ஆனால் பின் புலத்தில் ஒலித்த சத்தத்தைக் கேட்ட ரகுவிற்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது..
மொத்தம் பத்து வினாடிகள் தன் செவிகளையே நம்ப முடியாதவனாக அதிர்ச்சி அடைந்தான் ரகு.
அந்த சத்தம்.....
" ஏப்பா சாப்ட போன பக்கத்து சீட் ஆளுகளெல்லாம் வந்துட்டாங்களா பாருங்க... வண்டி கிளம்ப போகுது.. " என்ற கண்டக்டர் கூவிய குரல் கேட்டு அதிர்விலிருந்து மீண்டான் ரகு. பஸ் மோட்டலில் இருந்து பைபாஸில் சீறத்தொடங்கியது....
                                                                                                   
                                                                                                                            (தொடரும்... )