வியாழன், 1 அக்டோபர், 2009

இதுவும் நடந்துகொண்டிருக்கிறது

நன்றி : சந்தையில் லோகியம் விற்பவர் மற்றும் மாண்புமிகு.துணை முதல்வர் அவர்கள்.
                                    அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! கழக ஆட்சியிலே ஏழைகளின் பசிப் பிணியைப் போக்க முதல்வர் அளித்த அருமையான திட்டம் ஒரு ருபாய் அரிசித் திட்டம். ஆம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மத்தியிலே கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மத்திய அரசுக்கு கடிதம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! காவிரியில் தண்ணீர் பெற்றே தீருவோம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! எடியூரப்பா எனது நண்பர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! பெங்களூரில் திருவள்ளுவர் சிலை சென்னையில் சர்வஞர் சிலை ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! காவிரிப் பிரச்சனை தீர்ந்தது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மானங்கெட்ட தமிழர்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஹொகனக்கல் கோவிந்தா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! அம்மையார் ஆட்சியிலே நடக்கலையா? ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! தேர்தலா ? அத ஸ்பெக்ட்ரம் பாத்துக்கும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! குடும்ப சமாதானம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! எல்லாருக்கும் ஹல்வா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மறவாதீர்கள் மறந்தும் இரவாதீர்கள்! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஆகவே, உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! வாங்க சார் வாங்க சார் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! அண்ணனுக்கு வழி விடுங்க ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா!........................

டிஸ்கி :          யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! என்ற வார்த்தையை துணை முதல்வர் அவர்கள் சற்று அதிகமாகவே உபயோகித்தார். அதையும் சந்தையில் லேகியம் விற்பவர் பேசுவதும் ஒன்று போலவே எனக்குப் பட்டது. அதை இங்கே சொல்லி இருக்கிறேன் அவ்வளவே! இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே! கழகக் கண்மணிகள் கண்ணில் பட்டால் ( படாது, இந்த அளவிற்க்கு மண்டையில ஏது நமக்கு ? ) மன்னிக்கவும்.