வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

நூல் பல கல்.

அன்பு நண்பர்களே!
புத்தகங்கள் நமது ஒப்பற்ற ஆசானாக செயல்படுகின்றன.நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்.நூல்கள் பல படித்திருந்தாலும் குறிப்பிட்ட சில நூல்கள் மட்டும் நம் நெஞ்சில் நீங்காது இடம் பெற்றுவிடுகின்றன.அந்த வகையில் நான் விரும்பிப்படித்த சில நூல்கலை கீழே கொடுத்துள்ளேன்.
( டாப் டென் வரிசையில் )
புத்தகங்கள்

1.எனது போராட்டம்

( அடல்ப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு.ஒரு தவறே செய்தாலும் அதை இறுதிவரை கடைபிடித்து வாழ்ந்த மனிதன்.கொடூர செயல்கள் செய்தாலும் செய்வதற்கு ஓர் அசத்திய துணிச்சல்வேண்டுமல்லவா? )

2.அக்கினிச் சிறகுகள்

( அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.எளிமையின் எடுத்துக்காட்டு. ஒரு ஜனாதிபதி ஆனபோதும் கூட, இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என வாழ்ந்து காட்டிவரும் மனிதருள் சிறந்த மனிதர். இதைச்சொல்ல நமக்கு அருகதை இல்லை என்ற போதிலும் என் மனம் கவர்ந்த மாமேதை )

3.அர்த்த சாஸ்திரம்

( கௌடில்யர் என்ற சாணக்கியர் எழுதிய நீதிநூல்.கலாச்சாரம் சார்ந்த இவரது நீதிக்கொள்கைகள் இன்றைய சூழ்நிலையில் நம் இந்தியாவிற்கு உதவாது என்ற போதிலும் சிறந்த கருத்துக்களைக் கொண்ட நூல் இது )

4.வீடியோ நைட்ஸ் இன் காட்மன்ட் by pico iyar

( பீகோ ஐயர் என்னும் இந்த பயண மனிதர் உலகத்தில் சுற்றாத இடமே இல்லை எனலாம்.அத்தகைய மனிதர் இந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் என்ன நினைக்கிறார்கள் என்று கூறும்போது ச்சே! என்ன கொடுமை சரவணன் இது! என்று கூறத் தோன்றும்.இந்தியர்கள் அனைவரும் படித்து வெட்கப்பட வேண்டிய ( நமக்கு எப்போ அது இருந்திருக்கு ) அருமையான புத்தகம் )

5.ச்சே குவேரா

( லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யுநிச புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மாவீரன் ச்சே குவேரா. ஜீ ஸ்டுடியோ தொலைக்காட்சியில் தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்து இப்புத்தகத்தை வாங்கினேன்.படித்ததும் புரிந்தது இந்த மனிதனைப் போல ஓரிருவர் இங்கு இருந்தால் போதும் இந்தியத் திருநாடு சொர்க்க பூமியைத் திகழும் என்று. நம் கண் முன்னே இந்தத் திருமகனின் உருவப் படம் பொறித்த சட்டைகளை அணிந்து கொண்டு அரைகுறையாக இவரைப் பற்றி மேடைகளில் பேசிக்கொண்டு திரியும் சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இவரின் பேருக்கே களங்கம் விளைவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை )

6.சிந்து முதல் கங்கை வரை

( இந்நூலை எழுதியவர் ம்ருதுளசான்கித்யயணன் இது முதலில் தேவநகரி எழுத்து வடிவில் வெளிவந்தது. எப்போது தெரியுமா? கி மு ஒன்றாம் நூற்றண்டில்.சுட்ட செங்கற்க்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இந்தியாவில் முதலில் வெளிவந்த நாவல் ஆகும்.இதைப் படிக்கும் பொழுது இந்த அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் விட்டு விட்டு கானகத்தில் வாசம் செய்ய எண்ணம் தோன்றும் என்பது திண்ணம் )

7.சிவா வாக்கியர் பாடல் தொகுப்பு
எல்லா பாடல்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.விளக்கம் பெற தேடல் இல்லை.எதோ என்னால் முடிந்த, புரிந்து கொள்ளக்கூடிய பாடல்கள் கீழே

கோவிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே.

வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்கிறீர்
வாயிலே குதப்பு வேதமென படக்கடவதோ
வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!

கறந்தபால் முலைப்புகா,கடைந்த வெண்ணை மோர்புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே


8.குடும்பம் ( சீன நாவல் )

9.எட்வர்ட் தாட்சனின் மானுடபண்பாட்டியல்

10.ஆப்பிரிக்கா கண்டம் by மணியன்(இதயம் பேசுகிறது)